
* காணப்படுகிறவைகள் அநித்தியமானவை. காணப்படாதவைகளோ நித்தியமானவை.
* அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.
* முன்போலவே, மண் மண்ணுக்குத் திரும்பி போகும். கடவுள் கொடுத்த ஆவி அவரிடமே திரும்பிப் போகும்.
* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
* நான் விரும்புவது பலியை அல்ல. அன்பு நிறைந்த தயாளத்தை! ஏனெனில் நான் அழைக்க வந்தது நீதிமான்களையல்ல. பாவிகள் மனந்திருந்தவே.
* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அந்த அளவு உங்களுக்குத் திரும்ப அளிக்கப்படுவதுமின்றி கூடவும் கொடுக்கப்படும்.
* வானத்தின் உயரம், பூமியின் ஆழம், ராஜாக்களின் அந்தரங்கம் இவைகள் ஆராய்ந்து அறிய முடியாதன.
* அறம் தான் ஒரு தேசத்தை உயர்த்துகிறது. ஆனால், பாவமோ எந்த ஜனங்களுக்கும் இழிவாகும்.
* கத்தி எடுத்தவன் அந்த கத்தியாலேயே அழிந்து போவான்.
- பைபிள் பொன்மொழிகள்